தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


TNPSC - VAO தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

Go down

TNPSC - VAO தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு Empty TNPSC - VAO தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

Post by கிருஷ்ணன் Sat Aug 07, 2010 7:02 pm

TNPSC - VAO
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


கிராம
நிர்வாக அலுவலர் பதவிக்கு நேரடி நியமனத்திற்கு தகுதிவாய்ந்த விண்ணப்ப
தாரர்களிடமிருந்து 20-08-2010 அன்று மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள்
வரவேற்கப் படுகின்றன.

1.
பதவியின் பெயர் : தமிழ்நாடு அமைச்சுப் பணியில் ‘"கிராம நிர்வாக அலுவலர்'
(2009-10) (பணிக் குறியீட்டு எண் -050) காலியிடங்கள்: 1576;
(பதவிக்குறியீட்டு எண். 2025) சம்பளம்: ரூ.5,200- 20,200 தர ஊதியம்
ரூ.2,000/- (ச.ப. 1)

2.
பதவியின் பெயர்: தமிழ்நாடு அமைச்சுப் பணியில் ‘"கிராம நிர்வாக அலுவலர்'’ (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்கள்) (பணிக்குறியீட்டு எண் -050); காலியிடங்கள்: 1077* (பதவிக் குறியீட்டு எண்.
2025)

*
(*வரிசை எண்.2-ல் குறிப்பிடப் பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்
குடியினருக்கான குறைவுப் பணியிடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
வகுப்பைச் சார்ந்த மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள்
இராணுவத்தினர்களுக்கான நியமன ஒதுக்கீடு பொருந்தாது)

*
பட்டியல் வகுப்பினர்/பட்டியல் வகுப் பினர் (அருந்ததியர்கள்) மற்றும்
பட்டியல் பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும். (அவ்விண்ணப்பங்கள்
கிராம நிர்வாக அலுவலர் பதவி 2009-10-க்கான காலியிடங்கள் மற்றும்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கிராம நிர்வாக அலுவலர் குறைவுப் பணி
யிடத்திற்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).

* மாவட்டவாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பகிர்வு விவரங்கள் அறிவிக்கையில் உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

3. வரிசை எண். 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கு மட்டும்:

1)
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் (கொள்குறி வகை) பெற்ற மதிப்பெண்
களையும், அவர்கள் தெரிவு செய்த மாவட்ட முன்னுரிமை வரிசையினையும் அடிப்படை
யாகக் கொண்டும், இனச்சுழற்சி முறையினைப் பின்பற்றியும் அதாவது பட்டியல்
வகுப்பினர்/பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள் முன்னுரிமை வரிசைப்படி)
மற்றும் பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் (முஸ்லீம்) பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு மற்றும் முன்னாள்
இராணுவத்தினருக்கான 5% இடஒதுக்கீடு ஆகியவைகளைப் பின்பற்றியும் ஒவ்வொரு
மாவட்டத்திலும் தனித்தனியாக தெரிவு செய்யப்படுவர். எனினும் விண்ணப்ப
தாரரின் படிநிலைப் பட்டியலில் (Ranking list) உள்ள நிலை, காலிப்பணியிட நிலை
மற்றும் பணி நியமன ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றைப் பொருத்து அவரை எந்தவொரு
மாவட்டத் திற்கும் ஒதுக்கீடு செய்யும் உரிமை தேர்வாணை யத்திற்கு உண்டு.

2)
பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டில் 10% இடங்கள் ஆதரவற்ற
விதவைகளுக்கு ஒதுக்கப்படும். (மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தின்
விண்ணப்ப தாரர்களுக்கான விதிமுறைகள் பத்தி 4-ன் கீழுள்ள குறிப்பு மற்றும்
பத்தி 6-ஐ காண்க)

3) அரசு
ஆணை (டி) எண்.5 வருவாய் (பணி 7-1) துறை நாள் 08-01-2007-ன் படி மாற்றுத்
திறனாளிகளில் 40% முதல் 50% வரை (கை, கால்) (Orthopaedically Handicapped)
இயக் கத்தில் குறை உள்ளவர்களில் எழுதுவதில் எந்த விதத் தடையும்
இல்லாதவர்கள் மற்றும் உடல் இயக்கத்தில் குறைந்த அளவு இயலாமை உள்ளவர்களுக்கு
மட்டும் காலிப்பணி யிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட 3%
இடஒதுக்கீடு செய்யப்படும்.

4)
பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் அவ்விடங்களுக்காக தெரிவு
செய்ய தகுதிவாய்ந்த பெண் விண்ணப்ப தாரர்கள் கிடைக்கப் பெறாவிடில் அப்பணி
யிடங்கள் அதே வகுப்பைச் சார்ந்த தகுதிவாய்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக்
கொண்டு நிரப்பப்படும்.

5)
பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்) முன்னுரிமை வரிசை அடிப்படையில் அவர்
களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்பட்ட பிறகும்,
(அவ்வகுப்பினர்களில்) தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருப்பின்
அவ்விண்ணப்பதாரர்கள், பட்டியல் வகுப் பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இட ஓதுக்
கீட்டிலும் தகுதியின் அடிப்படையில் நிரப்பப் படுவர். பட்டியல் வகுப்பினர்
அருந்ததியர் களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங் களுக்கு தகுதிவாய்ந்த
விண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாவிடில் அப்பணியிடங்கள் பட்டியல் வகுப்பைச்
சார்ந்த அதாவது பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்)ளைத் தவிர
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

4.
பொதுவான தகவல்கள்: அ. மேலே பத்தி 3 -ல் உள்ள பணிநியமன ஒதுக்கீடு மற்றும்
அறிவுரைகள் யாவும் வரிசை எண். 1-ல் உள்ள 1576 கிராம நிர்வாக
அலுவலர்களுக்கான காலிப்பணியிடத்திற்கு மட்டுமே பொருந்தும்.

ஆ.
விளம்பரப்படுத்தப்படும் காலிப்பணியிடங் களின் எண்ணிக்கை தோராயமானதாகும்.
தெரிவு நடப்பதற்கு முன்போ அல்லது நடக்கும்போதோ, காலிப் பணியிடங்களின்
எண்ணிக்கை மாறு தலுக்கு உட்பட்டதாகும்.

இ.
பெண்கள் ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள்
இராணுவத்தினர் ஆகியோருக்கு வ.எண்.1-ல் உள்ள 1576 கிராம நிர்வாக
அலுவலர்களுக் கான காலிப்பணியிடங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட
இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ஈ.
உடற்தகுதிச் சான்றிதழ்: இப்பதவிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்
தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு
தலைமைச் செயலகப்பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்
உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும். இப்பதவிக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் - III அல்லது அதற்கு மேம்பட்ட தரம்
ஆகும். (Standard - III or Better)

உ.
மாற்றுத் திறனாளிகளை பொறுத்த வரையில் உடல் ஊனத்தின் இயல்பையும் இயலாமையின்
அளவையும் குறிப்பிட்டு அத்தகைய உடல் ஊனம் அவர் தேர்ந் தெடுக்கப்பட்ட
பதவிக்கான பணிகளை திறம்படச் செய்வதற்கு தடையாக இருக்காது என்று மருத்துவ
அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

5.தகுதிகள்: (அனைத்து விண்ணப்பதாரர் களுக்கும்)

அ. வயது: (01.07.2010 அன்று)

குறைந்தபட்ச
வயது: “""அனைத்து தரப்பினரும்''’’ 21 வயதினை நிறைவு செய் திருத்தல்
வேண்டும். (.1.7.1989 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்திருத்தல்
வேண்டும்.

அதிகபட்ச வயது :
(1)பட்டியல்
வகுப்பினர்/பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்) மற்றும் பட்டியல்
பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்/சீர் மரபினர்.
பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் (முஸ்லீம்)
மற்றும் அனைத்து வகுப்பைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 40 வயதினை
நிறைவு செய்யாமல் இருத்தல் வேண்டும். (2.7.1970 அன்றோ அல்லது அதற்குப்
பிறகோ பிறந்திருத்தல் வேண்டும்)

(ii) “""ஏனையோர்''’’30 வயதினை நிறைவு செய்யாமல் இருத்தல் வேண்டும். (2.7.1980 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருத்தல் வேண்டும்)

குறிப்பு
: (i) அரசு ஆணைப்படி நேரடி நியமனத் தடையாணையால் பாதிக்கப்பட்ட வேலையில்லா
இளைஞர்களுக்கும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும் உச்ச வயது வரம்பில் 5
ஆண்டுகள் சலுகை அளிக்கப்படும்.

(ii) தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் களுக்கான விதிமுறைகளில் பத்தி 4-ல் உள்ளவை இத் தெரிவிற்குப் பொருந்தாது.

(iii)
தேர்வாணையத்தின் "விண்ணப்பதாரர் களுக்கான விதிமுறைகள்' பத்தி 13 மற்றும்
14-ல் அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்புச் சலுகை உச்ச வயது வரம்பிற்கு
மட்டும் பொருந்தும்.

(iv)
பட்டியல் வகுப்பினர்/பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்) மற்றும்
பட்டியல் பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /
சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(முஸ்லீம்)-ஐ தவிர ஏனையோர் மாநில அல்லது மத்திய அரசுப்பணியில் ஐந்தாண்டுகள்
முறையான பணியில் இருப்பின், விதிமுறை களில் கூறப்பட்டுள்ள வயது வரம்பிற்கு
உட்பட்டிருந்தாலும் கூட விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவார்கள்.

(v)
டான்சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஆட்குறைப்பிற்கு உள்ளான தொழில்நுட்பம்
சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியாளர்கள் அரசுக் கழகங்கள் மற்றும்
அரசின் ஆளுகைக்குட்பட்ட நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படாதவர்களாக
இருப்பின் வயது வரம்பு தவிர எல்லா கல்வித் தகுதிகளும் இருக்கும் பட்சத்தில்
இவ்வறிவிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்கலாம் (சான்று
சமர்ப்பிக்க வேண்டும்) இப்பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு
விதிமுறைகளில் உள்ள வயது வரம்பு இவர்களுக்கு சாதகமாக அரசால்
தளர்த்தப்படும்.

(மேலும் சலுகைகள் தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணையத்தின் விண்ணப்ப தாரர்களுக்கான விதிமுறைகளைக் காண்க)

ஆ. கல்வித் தகுதி: அறிவிக்கை
நாளன்று (21-07-2010) விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிர்ணயிக்கப்பட்ட
கல்வித் தகுதி அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியினை பெற்றிருத்தல்
வேண்டும். “""குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி
வகுப்பில் (பத்தாம் வகுப்பு) (அ) அதற்கு சமமான கல்வித்தகுதியில் தேர்ச்சி
பெற்று மேல் நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில்
சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்''. ’(சமமான கல்வித் தகுதி தொடர்
பாக விண்ணப்பதாரர்களால் எழுப்பப்படும் கோரிக்கைக்கு அதற்கான சான்றிதழ்
இணைக்க வேண்டும்)

குறிப்பு:
(1) பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்குச் சமமான கல்வித்
தகுதியில் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கு மேம்பட்ட கல்வித்தகுதி
பெற்றிருப்பினும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.

(2)
மேலே குறிப்பிட்டுள்ளவாறு (கல்வித் தகுதிக்கான) நகல் சான்றிதழ்களை
விண்ணப்பப் படிவத்தோடு சேர்த்து அனுப்பத்தவறும் விண்ணப்பதாரர்களின்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இ. தமிழ் மொழியில் தகுதி: விண்ணப்ப தாரர்கள் தமிழில் போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும்; அதாவது

(i) பள்ளியிறுதித் தேர்வில் தமிழை ஒரு மொழியாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)

(ii) தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு பள்ளியிறுதி வகுப்பு பொதுத்தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (அல்லது)

(iii)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் துறைத்
தேர்வுகளில் ஒன்றான இரண்டாம் நிலை தமிழ் மொழித் தேர்வில் (முழுத் தேர்வு )
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6.
எழுத்துத் தேர்விற்கான திட்டம் (பள்ளியிறுதித் தேர்வின் தரம் (கொள்குறி
வகை): பாடம் கால அளவு அதிகபட்ச மதிப் பெண்கள் தெரிவிற்குத் தகுதி பெற
குறைந்த பட்ச மதிப்பெண்கள் ஒரே தாளில் பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்)
- 100 வினாக்கள் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (பத்தாம் வகுப்பு
தரம்) - 100 வினாக்கள் (3 மணி நேரம்) (150 150)= 300 ஆகும். மேலும்
எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை
யத்தின் இணையதள முகவரியில் காணலாம். “''www.tnpsc.gov.in''’

7.
எழுத்துத் தேர்விற்கான தேர்வு மையங்கள்: தேர்வாணையத்தின் விண்ணப்ப
தாரர்களுக்கான தகவல் சிற்றேடு பக்கம் 17-ல் பிற்சேர்க்கை 1-ல் உள்ள (A, B,
C, D & E) யில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்.

8.
தெரிவு செய்யும் முறை: விண்ணப்ப தாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்
பெண்கள் மற்றும் அவர்கள் அளிக்கும் மாவட்டங்களின் முன்னுரிமை வரிசையின்
அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். (மாவட்ட முன்னுரிமை அசல்
சான்றிதழ்கள் சரிபார்க்கும் போது பெற்றுக் கொள்ளப்படும்) (பணியிட
ஒதுக்கீட்டு விதிமுறை 1576 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு
மட்டும் பின்பற்றப்படும்)

9.
தேர்வுக் கட்டணம்: ரூ. 75/- (ரூபாய் எழுபத்தைந்து மட்டும்) தேர்வுக்
கட்டணம், தகவல் சிற்றேட்டின் பிற்சேர்க்கை -3-ல் பட்டியலிடப்பட்டுள்ள
அஞ்சலகங்களில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தின் மூலமாக மட்டுமே செலுத்தப்பட
வேண்டும். கட்டணம் செலுத்தியதற்காகப் பெறப்பட்ட அஞ்சலகப் பற்றுச் சீட்டை
விண்ணப்பத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டப்பட வேண்டும்.
அஞ்சலகப் பற்றுச் சீட்டு இப் பதவிக்கான விளம்பரம் நாளேடுகளில்
வெளியிடப்பட்ட தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பெறப்பட்டிருக்க வேண்டும்.
(மேலும் விவரங்களுக்கு தேர் வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான தகவல்
சிற்றேட்டின் பகுதி-ஒஒஒ ல் பத்தி-2 மற்றும் தேர்வுக் கட்டணச் சலுகைகள்
விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் பத்தி 12-ஐ காண்க). மாற்றுத் திறனாளிகள்
(அவர்களது குடும்ப வருமானம் எவ்வளவு இருப்பினும்) மற்றும் ஆதரவற்ற
விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
(மாற்றுத் திறனாளிகள் /ஆதரவற்ற விதவைகள் என்பதற்கான சான்றிதழ் களின்
நகல்கள் விண்ணப்ப படிவத்தோடு இணைத்தனுப்பப்பட வேண்டும்).

10. விண்ணப்பப்படிவத்தோடு இணைத் தனுப்பும் இணைப்பின் நகல்கள் :

அ)
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான
சான்றிதழ்களின் நகல்களுடன் (கல்வித் தகுதிச் சான்றிதழுடன்) தேர்வாணைய
விண்ணப்ப தாரர்களுக்கான விதிமுறைகள்பத்தி 15-ல் குறிப்பிட்டுள்ளபடியும்
மற்றும் தகவல் சிற்றேடு கலம் 26 பகுதி-II-ல் குறிப்பிட்டுள்ளபடியும்
ரூ.75/- (ரூபாய் எழுபத்தைந்து மட்டும்)க்கான அஞ்சலகப் பற்றுச் சீட்டை
அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டி விண்ணப்பப்
படிவத்தை அனுப்பவேண்டும் (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு
கோரப் படாமலிருந்தால்). ஆ) விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை
விண்ணப்பப் படிவத்தோடு சேர்த்து அனுப்பத் தேவை யில்லை. இ) இணையதளம் மூலம்
விண்ணப் பிக்க விரும்புகிறவர்கள் இவ்வறிவிக்கையின் பத்தி -13(ஈ)-ல் உள்ள
அறிவுரைகளைக் காண்க. (தேவையான சான்றொப்பமிட்ட சான்றிதழ் களின் நகல்களுடன்
அனுப்பப்படாத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும்)

11. தடையின்மைச் சான்றிதழ்: தேர்வாணை யத்தின் “ விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறை கள்’’ பத்தி 15-ல் உள்ள விதிமுறைகளைக் காண்க.

12.
சலுகைகள்: பட்டியல் வகுப்பினர்/பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்கள்).
பட்டியல் பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப் பட்ட
வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் (முஸ்லீம்), ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினர்,
மாற்றுத் திறனாளிகள், பிணைத் தொழிலாளிகள் அவர்தம் மகன்கள் மற்றும் மணமாகாத
மகள்களும் மற்றும் தமிழ்நாடு அரசின் தற்காலிக பணியிலிருந்து விடுவிக்கப்
பட்ட வர்கள் அப்பணியில் தொடர்ந்து நீடிப் பவர்கள் ஆகியவர்களுக்கு
அறிவிக்கப் பட்டுள்ள வயது வரம்பு மற்றும்/அல்லது கட்டணம் ஆகியவற்றிற்கான
சலுகைகள் தேர் வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகளில்
அறிவிக்கப்பட்டுள்ளன.

13.
விண்ணப்பப்படிவங்கள் வழங்கல்: தமிழ்நாட்டின் அனைத்துத் தலைமை/துணை
அஞ்சலகங்களிலும் மற்றும் புதுச்சேரி தலைமை அஞ்சலகத்திலும். ரூ. 30/-
(ரூபாய் முப்பது மட்டும்) செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். (அஞ்சலகங்களின்
பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளம் www. tnpsc.gov.in என்ற முகவரியில்
கொடுக்கப் பட்டுள்ளது).

மேலே
கூறியுள்ளபடி பெறப்பட்ட OMR அல்லது இணையதளத்தின் மூலமாகவோ பெறப்பட்ட
விண்ணப்பப்படிவத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தட்டச்சு
செய்யப்பட்டதும், அச்சிடப்பட்டதும். ஒளி நகலிடப்பட்டதும் அல்லது புகைப்பட
நகல் எடுக்கப்பட்டதுமான விண்ணப்பப் படி வங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஈ. இணையதளம் மூலமாக விண்ணப்பித்தல்:

விண்ணப்பதாரர்கள்
"ஆன்லைன்' விண்ணப் பத்தினை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in
மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தினை பதிவு செய்யும்
முன் ரூ.105/-க்கான (விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம்
ரூ.30 75=ரூ.105/-) அஞ்சலகப் பற்றுச் சீட்டை தகவல் சிற்றேட்டின்
பிற்சேர்க்கை -IIIலில் பட்டியலிடப்பட்டுள்ள அஞ்சலகங்களில் ஏதேனும் ஒரு
அஞ்சலகத்தில் பெற்றிருத்தல் வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்துவ
திலிருந்து விலக்கு கோருபவர்கள் விண்ணப்பக் கட்டணத்திற்குரிய ரூ.30/-
(ரூபாய் முப்பது மட்டும்)க்கான அஞ்சலகப் பற்றுச் சீட்டு பெற்றிருத்தல்
வேண்டும். அஞ்சலகப் பற்றுச் சீட்டை விண்ணப்பத்தில் அதற்கென ஒதுக்கப்
பட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும்
விண்ணப்பதாரர்களுக்கும் இவ்வறிவிக்கை/ விளம்பரத்தில் விண்ணப்பதாரர்களுக்கென
கூறப்பட்டுள்ள விதிமுறைகள் தகவல் சிற்றேட்டில் உள்ள அறிவுரைகள்
பொருந்தும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் சேர்த்து
(சான்றொப்பமிடப்பட்டது) அஞ்சலகப் பற்றுச்சீட்டு அதற்கான இடத்தில்
ஒட்டப்பட்டு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளுக்குள்
தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கடைசி நாளுக்குப் பிறகு
பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். "ஆன்லைன்' வாயிலாக
விண்ணப்பிக்கும் வசதியானது 18-08-2010 அன்று மாலை 5.15 மணிக்கு
நிறுத்தப்படும்.

14.
விண்ணப்பங்களை அனுப்பும் முறை: அ. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பப்படிவத்தை தேர்வாணையத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் கீழ்கண்ட
அறிவுரை களை பின்பற்ற வேண்டும்.

(i)
விண்ணப்பதாரர்கள் உறுதி மொழிக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பந்து
முனை/ எழுதுகோலினால் மட்டுமே கையொப்பமிடப்பட்டிருத்தல் வேண்டும்.
கையொப்பமிடத் தவறிய விண்ணப்பதாரர் களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

(ii)
விண்ணப்பதாரர்கள் திருத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் கலங்கள் 1, 1(a), 3,
4, 14 (b), 14(c), 14(d), மற்றும் கட்டாயப்பாடம் (கலம் 22)-ல் ஆகியவற்றை
இவ்வறிவிக்கையில் காணப்படும் விவரங்களுக்கு இணங்க நிரப்பப் பட்டிருத்தல்
வேண்டும்.

(iii)
விண்ணப்பதாரர்கள், திருத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ள கலங்கள் 23,
23(a) மற்றும் 23(c)ஆகியவற்றில் குறிப் பிட்டுள்ளவாறு
தண்டிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலோ அதன்
விவரங்களை கண்டிப்பாக அவற்றில் நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும்.

ஆ.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்
களுடன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்
வாணையம், எண்.1, கீரிம்ஸ் சாலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு
விண்ணப்பங்கள் பெறப்படும். கடைசி நாளான 20-08-2010 அன்று மாலை 5.45
மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்பாகவோ தேர்வாணைய அலுவலகத்தால் பெறப்படும்
வகையில் அனுப்பி வைத்தல் வேண்டும்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்
Admin
Admin

பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum