தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
"பாஸ்' இருக்கு; ஆனா, பறக்குதே பஸ் : குமுறும் கிராமத்து மாணவ, மாணவியர்!?*
Page 1 of 1
"பாஸ்' இருக்கு; ஆனா, பறக்குதே பஸ் : குமுறும் கிராமத்து மாணவ, மாணவியர்!?*
என்னடா படத்தை இவ்வளவு சின்னதா இருக்கேன்னு பாக்குறீங்கள போட்டோமேல உங்க எலிய (Mouse) கொண்டுபோய் வைங்க!!!!
கோவை: இலவச பஸ் பாஸ் இருந்தும், அரசு பஸ்கள் நிற்க மறுப்பதால் பாதிப்புக்குள்ளான கிராமத்து மாணவ, மாணவியர், கோவை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.சூலூர் தாலுகாவுக்குட்பட்ட கிராமம், ராவத்தூர். கோவை - திருச்சி ரோட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை. இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சூலூரிலுள்ள பள்ளிகளுக்கு செல்கின்றனர்; கோவைக்கு கல்லூரிக்கும் பலர் செல்கின்றனர். தவிர, வேலைக்குச் செல்வோரும் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று, திருச்சி ரோட்டில் பஸ் ஏறுகின்றனர். கோவை உக்கடத்திலிருந்து ராவத்தூர் வழியாக சோமனூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. என்ன காரணத்தாலோ ஐந்து ஆண்டுகளுக்கு முன் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. தொழில் வளர்ச்சி பெற்ற கோவை மாவட்டத்தில், பஸ் வசதி இல்லாத கிராமம் என்று பெயர் பெற்றுள்ளது ராவத்தூர்.
பல ஆண்டுகளாக இந்த கிராமத்து மக்கள் சார்பில், பல்வேறு துறைகளில் மனுக்கள் கொடுத்தும் ஒரு பயனும் இல்லை. பஸ் வசதியில்லாததால் அதிகம் பாதிப்பது மாணவ, மாணவியர்தான். ராவத்தூரிலிருந்து சூலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்லும் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ், அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது எந்த வகையிலும் இவர்களுக்கு பயன்படுவதில்லை. காலையில் ஊரிலிருந்து நடந்து சென்று, திருச்சி ரோட்டில் ராவத்தூர் பிரிவு அருகே இவர்கள் நிற்பார்கள். மாணவ, மாணவியர் நிற்பதை கண்டாலே எந்த அரசு பஸ்சும் நிற்பதில்லை. மாறாக, அரை கி.மீ., தள்ளி பஸ்களை நிறுத்துகின்றனர். ஓடிப்போய் பஸ்சை பிடிப்பதற்குள் கிளப்பிச் சென்று விடுகின்றனர். இதனால், பெரும்பாலான நேரங்களில் தனியார் டவுன் பஸ்களில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிச் செல்வதாக கூறுகின்றனர், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்.
அதே போல, மாலையில் சூலூரில் பஸ் ஸ்டாண்ட்டில் நிற்கும் அரசு பஸ்சில் ஏறினால் மட்டுமே இவர்களுக்கு பயணத்துக்கு அனுமதி கிடைக்கும்.வேறு இடங்களில் நின்றால், பஸ்கள் நிற்காததோடு, வேறு பஸ்களிலும் இவர்களை ஏற்றுவதும் கிடையாது. இதனால், பள்ளிக்குச் சென்று வருவதற்குள் மாணவ, மாணவியர் படும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை. சூலூரிலிருந்து ராவத்தூருக்கு இயக்கப்படும் மினி பஸ்சும், முறையாக வருவதில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு.உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ள ராவத்தூரைச் சேர்ந்த மாணவ, மாணவியரில் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலையில் சீருடை சகிதமாக பஸ் ஏறி கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு அங்கேயே அமர்ந்தனர். இவர்களை, இருகூர் நகர அ.தி.மு.க., செயலாளர் பொன்னம்மாள், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்நாதன் ஆகியோர் அழைத்து வந்திருந்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் இந்த மாணவ, மாணவியரை யாரும் கண்டு கொள்ளவில்லை; கலெக்டரும் ஊரில் இல்லை. கடைசியாக, டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்துத் திரும்பினர். பதிலும், பஸ்சும் எப்போது வருமென்றுதான் தெரியவில்லை.
யார் பொறுப்பு? பஸ் வசதி இல்லாததால் பாதிக்கப்படுவது மாணவ, மாணவியர் மட்டுமில்லை; அந்த ஊர் பொது மக்களும்தான். அப்படியிருக்கையில், ஏதுமறியாத மாணவ, மாணவியரை, அதுவும் பள்ளி நாட்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து அரசியல் செய்தது, எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. ஏராளமான மாணவ, மாணவியரை அழைத்து வரும்போது, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா என்பது கேள்வி. இதே நபர்கள், தங்களது கட்சியின் ஒத்துழைப்புடன் இதற்காக போராடியிருந்தால் பாராட்டலாம்.
________________
நன்றி : தினமலர்.
கோவை: இலவச பஸ் பாஸ் இருந்தும், அரசு பஸ்கள் நிற்க மறுப்பதால் பாதிப்புக்குள்ளான கிராமத்து மாணவ, மாணவியர், கோவை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.சூலூர் தாலுகாவுக்குட்பட்ட கிராமம், ராவத்தூர். கோவை - திருச்சி ரோட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை. இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சூலூரிலுள்ள பள்ளிகளுக்கு செல்கின்றனர்; கோவைக்கு கல்லூரிக்கும் பலர் செல்கின்றனர். தவிர, வேலைக்குச் செல்வோரும் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று, திருச்சி ரோட்டில் பஸ் ஏறுகின்றனர். கோவை உக்கடத்திலிருந்து ராவத்தூர் வழியாக சோமனூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. என்ன காரணத்தாலோ ஐந்து ஆண்டுகளுக்கு முன் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. தொழில் வளர்ச்சி பெற்ற கோவை மாவட்டத்தில், பஸ் வசதி இல்லாத கிராமம் என்று பெயர் பெற்றுள்ளது ராவத்தூர்.
பல ஆண்டுகளாக இந்த கிராமத்து மக்கள் சார்பில், பல்வேறு துறைகளில் மனுக்கள் கொடுத்தும் ஒரு பயனும் இல்லை. பஸ் வசதியில்லாததால் அதிகம் பாதிப்பது மாணவ, மாணவியர்தான். ராவத்தூரிலிருந்து சூலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்லும் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ், அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது எந்த வகையிலும் இவர்களுக்கு பயன்படுவதில்லை. காலையில் ஊரிலிருந்து நடந்து சென்று, திருச்சி ரோட்டில் ராவத்தூர் பிரிவு அருகே இவர்கள் நிற்பார்கள். மாணவ, மாணவியர் நிற்பதை கண்டாலே எந்த அரசு பஸ்சும் நிற்பதில்லை. மாறாக, அரை கி.மீ., தள்ளி பஸ்களை நிறுத்துகின்றனர். ஓடிப்போய் பஸ்சை பிடிப்பதற்குள் கிளப்பிச் சென்று விடுகின்றனர். இதனால், பெரும்பாலான நேரங்களில் தனியார் டவுன் பஸ்களில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிச் செல்வதாக கூறுகின்றனர், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்.
அதே போல, மாலையில் சூலூரில் பஸ் ஸ்டாண்ட்டில் நிற்கும் அரசு பஸ்சில் ஏறினால் மட்டுமே இவர்களுக்கு பயணத்துக்கு அனுமதி கிடைக்கும்.வேறு இடங்களில் நின்றால், பஸ்கள் நிற்காததோடு, வேறு பஸ்களிலும் இவர்களை ஏற்றுவதும் கிடையாது. இதனால், பள்ளிக்குச் சென்று வருவதற்குள் மாணவ, மாணவியர் படும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை. சூலூரிலிருந்து ராவத்தூருக்கு இயக்கப்படும் மினி பஸ்சும், முறையாக வருவதில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு.உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ள ராவத்தூரைச் சேர்ந்த மாணவ, மாணவியரில் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலையில் சீருடை சகிதமாக பஸ் ஏறி கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு அங்கேயே அமர்ந்தனர். இவர்களை, இருகூர் நகர அ.தி.மு.க., செயலாளர் பொன்னம்மாள், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்நாதன் ஆகியோர் அழைத்து வந்திருந்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் இந்த மாணவ, மாணவியரை யாரும் கண்டு கொள்ளவில்லை; கலெக்டரும் ஊரில் இல்லை. கடைசியாக, டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்துத் திரும்பினர். பதிலும், பஸ்சும் எப்போது வருமென்றுதான் தெரியவில்லை.
யார் பொறுப்பு? பஸ் வசதி இல்லாததால் பாதிக்கப்படுவது மாணவ, மாணவியர் மட்டுமில்லை; அந்த ஊர் பொது மக்களும்தான். அப்படியிருக்கையில், ஏதுமறியாத மாணவ, மாணவியரை, அதுவும் பள்ளி நாட்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து அரசியல் செய்தது, எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. ஏராளமான மாணவ, மாணவியரை அழைத்து வரும்போது, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா என்பது கேள்வி. இதே நபர்கள், தங்களது கட்சியின் ஒத்துழைப்புடன் இதற்காக போராடியிருந்தால் பாராட்டலாம்.
________________
நன்றி : தினமலர்.
கிருஷ்ணன்- Admin
- பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|