தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


TNPSC தேர்வும் அணுகு முறையும்

Go down

TNPSC தேர்வும் அணுகு முறையும் Empty TNPSC தேர்வும் அணுகு முறையும்

Post by priyakutty Sun Jul 11, 2010 11:49 am

TNPSC தேர்வும் அணுகு முறையும்




"எந்த
ஒரு நாடு வேலைவாய்ப்பை அளிக்க மறுக்கிறதோ, அந்த நாட்டின் பொருளாதாரம்
வளர்ச்சியடைய சாத்தியமே இல்லை' என நவீன பொருளாதாரத்தின் தந்தை
ஜே.எம்.கீன்ஸ் கூறி வேலைவாய்ப்பை அளிப்பதை வலியுறுத்தினார். வேலை
வாய்ப்பளிக்காத ஒரு அரசும் ஆட்சியும் நிலைக்காது என்பதை கடந்த அ.தி.மு.க.
ஆட்சியில் பார்த்தோம். என்னவானாலும் சரி, தமிழக இளைஞர்களுக்கு, அரசு வேலை
வாய்ப்பை அளிப்பதில்லை என ஐந்தாண்டு ஆட்சியில் இருமாப்புடன் இருந்தார்
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. அதனால் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
அரசாங்க பணிகளில் நியமனம் நடை பெறவில்லை. முக்கியமாக தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்திற்கு அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்த தடை
விதித்திருந்தது. அதனால் லட்சக்கணக் கான படித்த- வேலையில்லாத பட்டதாரிகள்
மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆட்சி மாறியது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி
ஏற்பட்டு, கலைஞர் மு.கருணாநிதி முதல்வரானார். இளைஞர்களின் எதிர்காலத்தை
மனதில் கொண்டு, டி.என். பி.எஸ்.சி. மீதிருந்த தடையை நீக்கினார். அதனால்
அரசுப் பணிகளுக்கான அறிவிப்புகள் வந்தன. பல லட்சக்கணக்கான மாணவர்கள்
நம்பிக்கையுடன் தேர்வை எழுதினர். அதில் வெற்றிப்பெற்ற பல ஆயிரக்கணக்கான
இளைஞர்கள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து
வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நம்பிக்கையுடன்
இளைஞர்கள் விண்ணப் பித்து, தேர்வை எழுதி, வெற்றி பெறுகின்றனர். திறமையாக
படித்தால் அரசாங்க வேலை வாய்ப்பு உண்டு என்ற எண்ணம் இன்று தமிழக இளைஞர்கள்
மத்தியில் ஏற்பட்டுள் ளது. இதனால் லட்சக்கணக்கான வேலை யில்லா பட்டதாரிகள்,
தனியார் பணியாளர் கள், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவர்கள் என நம்பிக்கையுடன்
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்குத் தொடர்ந்து தயார் செய்து
வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஆணையம்

தற்சமயம்
டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் இடம் மாறியுள்ளது. இடம் மட்டுமல்ல, அதன்
செயல்பாடுகளும்தான். இதற்கு காரணம் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களும் அதன்
தலைவர் அரங்க. செல்லதுரை அவர்களும் தான். இந்த புதியத் தலைவர் மிகவும்
எளிமை யானவர். நேர்மையானவர். கிராமத்தில் பிறந்து படித்து வந்ததால், தமிழக
கிராம இளைஞர்கள் மீது அதிக அக்கறையும் நேசமும் கொண்டவர். ஆணையத்தின்
ஒவ்வொரு நடவடிக்கையும் எப்படி மாணவர்களுக்கு நன்மைத் தருகிறது, என்பதில்
அதிக அக்கறைக் கொண்டவர். சென்ற வருடம் குரூப்- ஒஒ தேர்வு வினாக்கள் மிகவும்
கடினமாக கேட்கப்பட்டுவிட்ட தாகவும், அதனால் மாணவர்கள் மிகவும்
சிரமப்பட்டதாகவும் கேள்விப்பட்டவுடன் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானார்.
அதனால் இனி எந்த ஒரு தேர்வும் கிராமபுற இளைஞர்களின் நம்பிக்கையை, வெற்றி
வாய்ப்பை பாதிக்கும் அளவிற்கு இருக்கக்கூடா தென முடிவு செய்தார்.
அதனால்தான் குரூப்-ஒ தேர்வை மிகவும் எளிதான தேர்வாக நடத்தி முடித்தார்.
இத்தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது என தேர்வெழுதிய அனைவரும்
ஆறுதலடைந்தனர். இதனை மனதில் கொண்டு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஒவ்வொரு
தேர்வையும் நன்கு ஆலோசனை செய்து, காலதாமதமானாலும் சிறப்பாக இருக்க
வேண்டுமென எண்ணுகிறார். அவரின் சேவை மனப்பான்மையை உணர்ந்த
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களும் திறமையாக செயல்பட்டு சிறந்த முறையில்
விண்ணப்ப படிவங்களையும், வினாக்களையும் தயாரித்து வருகின்றனர். இந்தாண்டு
முழுவதும் தேர்வுகள் குறித்த அட்டவணையை தயாரித்து அதன்படி அறிவிப்புகளை
வெளியிடவும், தேர்வுகளை நடத்திடவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

வாசகர்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

கடந்த
ஆறுமாத காலமாக எண்ணற்ற "பொது அறிவு உலகம்' வாசகர்கள் பல்வேறு சந்தேகங்களை
எங்களிடம் கேட்டனர். கேட்டும் வருகின்றனர். அவர்களின் ஐயத்தை போக்குவது
"பொது அறிவு உலக'த்தின் கடமை. அவற்றின் அடிப்படையில் அதிகமாக கேட்கப் பட்ட
சந்தேகங்களை தொகுத்து இங்கு விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளோம். அதிக மான
வாசகர்கள் கேட்ட கேள்வி வி.ஏ.ஓ. தேர்வு எப்போது? என்பது. அதற்கான பதில்
வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளிவரும். இதற்கான
காலியிடம் 3,000-க்குள் இருக்கும். அடுத்து, குரூப்-ஒஒ, குரூப்-ஒ
தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளிவரும்? என்பதாகும். குரூப்-ஒஒ
தேர்வுக் கான முடிவுகள் நவம்பர் மாதத்திலும், குரூப்-ஒ தேர்வுக்கான
முடிவுகள் அக்டோபர் மாதத் திலும் வெளிவரும். அதைத் தொடர்ந்து இரண்டுத்
தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளிவரும்.

அடுத்து
முக்கியமாக திறந்த வெளிப் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்கள்
இத்தேர்வை எழுத முடியுமா? அவ்வாறு எழுதினால், பணியில் அமர்த்து வார்களா?
என பல வாசகர்கள் கேட்டனர். அதற்கான பதில்:

பல்கலைக்கழக
மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டிலுள்ள பல் கலைக்கழகங்களால்
திறந்த வெளிப் பல்கலைக் கழக முறை மூலம் வழங்கப்படும் பட்டயப் படிப்பு,
பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றிற்குச் சமமாகக்
கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பிற்கு அங்கீகாரம் அளித்து சென்ற வருடமே
தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளி இறுதித் தேர்வு (பத்தாம்
வகுப்பு) மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வித் தேர்வு (+2) ஆகியவைகளில்
தேர்ச்சி பெற்றப்பின். திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களின் வழியாகப்
பெறப்படும் பட்டயம்/பட்டம்/முதுகலை பட்டங்களை மட்டும் பொதுப் பணிகளில்
நியமனம்/பதவி உயர்வு பெற அங்கீகரித்து 18-8-2009-ம் ஆண்டு (அரசாணை நிலை
எண்.107) ஆணையிடப்பட்டது.

பிறிதொரு
கேள்வி- தேர்வுகளில் ஒரு, கேள்விக்கான சாய்ஸில் அனைத்தும் தவறாகவோ அல்லது
இரண்டு விடைகள் சரி என்பது போலவே கேள்வி வந்தால் தேர் வாணையம் என்ன
செய்யும்? அவ்வாறு தவறான கேள்வி வந்தால் அதற்கு மதிப் பெண்கள்
வழங்கப்படும். ஒரே கேள்விக்கு இரண்டு சரியான விடைகள் இருந்தாலும் அதற்கு
இரண்டு விடைகளில் எது பூர்த்தி செய்திருந்தாலும் மதிப்பெண்கள் தரப்படும்.
மற்றொரு கேள்வி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய மாற்றங்கள் செய்யப்படுமா?
ஆம் செய்யப்படும். அதுவும் படிப்படியான மாற்றங்களையே செய்வர். சிவில்
சர்வீசஸ், வங்கி, ரயில்வே தேர்வுகளைப் போன்று தவறான விடைக்கு மதிப்பெண்
குறைத்தல் (நெகடிவ் மதிப்பெண்) என்ற முறையானது. டி.என்.பி.எஸ்.சி.
தேர்வுகளும் கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

இன்னும்
எந்த மாதிரியான தேர்வுகளுக் கான அறிவிப்புகள் வரவுள்ளன? டி.என். பி.எஸ்.சி
தேர்வு அட்டவணையில் நிறையவே உள்ளன. அவற்றில் முக்கியமாக அடுத்தடுத்து
நடக்கப்போகும் தேர்வுகளானது, அறிவியல் உதவியாளர் (Scientific Assistant),,
அசிஸ்டண்ட் ஜியாலஜிஸ்ட், ஆவணகாப்பக பணி, பள்ளி உதவியாளர் (School
Assistant), செக்ஷன் ஆபீசர் (Section Officer Tamilnadu Cell), அட்டவணை
வகுப்பினர்களுக்கான அரசு பணி போன்றவையாகும். குரூப்- ஒய (டைப் பிஸ்ட்
மற்றும் உதவியாளர்) போன்ற அறி விப்புகளுடன் குரூப்- I, II, VAO போன்ற
வற்றிற்கான அறிவிப்புகள் வெளிவர உள்ளன.

முக்கியமான
இன்னொரு கேள்வி டி.என்.பி. எஸ்.சி. தேர்வுக்கான வினாக்களை எப்படி,
எங்கிருந்து கேட்கப்படுகிறது? என்பது. டி.என்.பி.எஸ்.சி சிலபஸானது பள்ளி
பாட நூல்களும், செய்தித் தாள்களும் உள்ளடக்கிய தாகும். அதனால் அதன்
அடிப்படையிலேயே கேள்விகள் கேட்கப்படும். முக்கியமாக தேர்வில் எப்படி
கேள்விகள் கேட்கப்படும் என்பதை அதிகபட்ச துல்லியமாக "பொது அறிவு உலகம்'
இதற்கான நூல்களையும், இதழ்களையும் தயாரித்து வருகிறது. அதனை தொடர்ந்து
படியுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
avatar
priyakutty

பதிவுகள் : 62
சேர்ந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum